“மனைவியை ஒரு ரூமிலும் ,மாடலிங் பெண்ணை மற்றொரு ரூமிலும் ..”-பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடந்த பலாத்காரம்

 

“மனைவியை ஒரு ரூமிலும் ,மாடலிங் பெண்ணை மற்றொரு ரூமிலும் ..”-பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடந்த பலாத்காரம்


குடும்பத்தோடு டெல்லிக்கு வந்த ஒரு நபர், ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு மாடலிங் பெண்ணை கெடுத்ததால் போலீசார் அவரை தேடி வருகிறார்கள்

“மனைவியை ஒரு ரூமிலும் ,மாடலிங் பெண்ணை மற்றொரு ரூமிலும் ..”-பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடந்த பலாத்காரம்


டெல்லியின் சனக்யபுரி பகுதியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மும்பையைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மனைவியோடு தங்கியிருந்தார் .இந்நிலையில் அந்த நபரோடு ஒரு 22 வயதான மாடலிங் பெண் சமூக ஊடகத்தில் நட்பு கொண்டு பேசி வந்தார் .
அதனால் அந்த நபர் அந்த மாடலிங் பெண்ணை அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வரச்சொன்னார் .ஆனால் அந்த ஹோட்டலில் அவரின் மனைவி தங்கிருயிருப்பதால் ,தான் சிக்கிக்கொள்வோம் என்று பயந்த அவர் அந்த பெண்ணுக்கு அருகிலுள்ள மற்றொரு நட்சத்திர ஹோட்டலில் ரூம் புக் செய்தார் .பின்னர் அந்த ரூமிற்கு அந்த மாடல் பெண்ணை வர சொன்னார் .அதன் பிறகு மனைவி தூங்கியதும், அந்த மாடல் பெண் தங்கியிருந்த அறைக்குள் சென்றார். அதன் பிறகு அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்து விட்டு அவரை அதே ரூமிலேயே பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டார் .
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அருகிலுள்ள காவல் நிலையம் சென்று அவர் மீது புகாரளித்தார் .அப்போது அவர் கூறிய புகாரில் ,தன்னை கான் மார்க்கெட்டில் அவர் சந்திக்க சொன்னதாகவும் ,அதற்கு தான் மருத்ததால் ஹோட்டலில் ரூம் போட்டு தன்னை கெடுத்ததாகவும் கூறினார்.
பிப்ரவரி 23 ம் தேதி தென் மும்பையைச் சேர்ந்த அந்த 28 வயது நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்ய ஒரு போலீஸ் குழு மும்பைக்கு அனுப்பப்பட்டதாகவும் போலீசார் கூறினார்கள்

“மனைவியை ஒரு ரூமிலும் ,மாடலிங் பெண்ணை மற்றொரு ரூமிலும் ..”-பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடந்த பலாத்காரம்