மனைவியையும் பாட்டியையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்த முயன்ற இளைஞன்;  ஈரோட்டில் பரபரப்பு?!..

 

மனைவியையும் பாட்டியையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்த முயன்ற இளைஞன்;  ஈரோட்டில் பரபரப்பு?!..

சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ், பெட்ரோல் ஊற்றியிருந்ததால் அவரை குளிக்க வைத்து அழைத்துச் சென்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்தவர் செல்லத்துரை. லாரி டிரைவரான இவருக்கும், ஈரோடு மாவட்டம் மோச்சிகீரனார் வீதியை சேர்ந்த நிர்மலாவுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. நிர்மலா, செல்லத்துரையை காதல் திருமணம் செய்துகொண்டார்.

காதல்

திருமணமான பின்பு செல்லத்துரைக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான விஷயம் தெரியவந்துள்ளது. இதனால் நிர்மலா கோபித்துக்கொண்டு தன் பாட்டி மல்லிகா வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவியை சமாதானம் செய்து தன்னோடு அழைத்துச் செல்ல பாட்டி வீட்டுக்கு சென்றிருக்கிறார் செல்லத்துரை. மனைவியை சமாதானம் செய்து தன்னோடு அனுப்பி வைக்கும்படி பாட்டியிடம் கேட்டிருக்கிறார். ஆனால் நிர்மலா வர மறுத்துவிட்டார். 

என்ன செய்வதென்று அறியாத செல்லத்துரை, குடித்துவிட்டு கையில் பெட்ரோல் கேனுடன் வந்து தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அப்போதும் நிர்மலா மசியவில்லை, தன் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு நிர்மலா மீதும், பாட்டியின் மீதும் ஊற்றியிருக்கிறான். இதனால் பீதியடைந்து அவர்கள் அலற, அக்கம்பக்கத்தினர் வந்து செல்லத்துரையை அடித்து உதைத்து கட்டிவைத்தனர்.

பின்னர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ், பெட்ரோல் ஊற்றியிருந்ததால் அவரை குளிக்க வைத்து அழைத்துச் சென்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

கைது

இதற்கு முன்பே செல்லத்துரை மீது மகளிர் காவல்நிலையத்தில் நிர்மலா புகார் அளித்திருந்திருக்கிறார். அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இரு தரப்பினரிடமும் பேசி கையெழுத்து வாங்கி அனுப்பி வைத்துள்ளனர். திடீரென யார் பேச்சையோ கேட்டுக்கொண்டு செல்லத்துரை தற்கொலை முயற்சி நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.