மனைவியுடன் தகாத உறவு வைத்த சப் இன்ஸ்பெக்டர்: தட்டி கேட்ட கணவருக்கு நேர்ந்த கதி!

 

மனைவியுடன் தகாத உறவு வைத்த சப் இன்ஸ்பெக்டர்: தட்டி கேட்ட கணவருக்கு நேர்ந்த கதி!

மனைவியுடன் தகாத உறவு வைத்திருப்பதைக் கேட்ட கணவரை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அடித்து உதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்: மனைவியுடன் தகாத உறவு வைத்திருப்பதைக் கேட்ட கணவரை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அடித்து உதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த  மலைவாசனுக்கும், அவரின் மனைவி மணிமேகலைக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவர் மீது புகார் அளிக்க மணிமேகலை காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனால் அங்கு சப்-இன்ஸ்பெக்டராக  பணிபுரிந்து வரும் கலைசெல்வன் என்பவருடன் மணிமேகலைக்கு பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனை அறிந்த மலைவாசன், இருவரையும் கண்டித்துள்ளார். இதனையடுத்து மலைவாசனை கடுமையாகத் தாக்கிய கலைச்செல்வன் அவரை அவரது வீட்டிலேயே சிறை வைத்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இதையடுத்து அவருக்குத்   தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மலைவாசன் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் கலைச்செல்வன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை.