‘மனைவியுடன் தகராறு’.. மைத்துனரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன் கைது!

 

‘மனைவியுடன் தகராறு’.. மைத்துனரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன் கைது!

திருமணம் ஆனதிலிருந்தே இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வருமாம். அதே போலக் கடந்த சில நாட்களுக்கு முன் சண்டை வந்ததால் லட்சுமி அவரது அம்மா வீட்டுக்குச் சென்றுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், மஞ்சளகிரி கிராமத்தில் வசித்து வந்த தம்பதி மூர்த்தி-லட்சுமி. திருமணம் ஆனதிலிருந்தே இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வருமாம். அதே போலக் கடந்த சில நாட்களுக்கு முன் சண்டை வந்ததால் லட்சுமி அவரது அம்மா வீட்டுக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர், அவரை சமாதான படுத்தி வீட்டுக்கு மீண்டும் அழைத்து வர மூர்த்தி லட்சுமியின் அம்மா வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த லட்சுமியின் சகோதரர் லட்சுமி பதி, லட்சுமியை வீட்டுக்கு அனுப்ப முடியாது என்று கூறி கடுமையாகப் பேசியுள்ளார். 

ttn

இதனால் அவர்களுக்கிடையே இருந்த அந்த சண்டை கொஞ்சம் நேரத்தில் வாக்குவாதமாக மாறியுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் லட்சுமி தடுக்க முயன்றும் ஒன்றும் பலனளிக்கவில்லையாம். இதனிடையே வாக்குவாதம், கைகலப்பாக மாற மூர்த்தி தன் கையிலிருந்த கத்தியை வைத்து லட்சுமி பதியைக் குத்தியுள்ளார்.

ttn

அதில் படுகாயம் அடைந்த லட்சுமி பதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், லட்சுமி பதியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், கொலை செய்த  பின்னர் அங்கிருந்து எஸ்கேப் ஆக முயன்ற நிலையில் போலீசார் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.