மனைவியுடன் தகராறு.. குழந்தைகளை மலையிலிருந்து தூக்கி வீசி கொன்ற தந்தை குண்டர் சட்டத்தில் கைது !

 

மனைவியுடன் தகராறு.. குழந்தைகளை மலையிலிருந்து தூக்கி வீசி கொன்ற தந்தை குண்டர் சட்டத்தில் கைது !

குழந்தைகளை செம்மேடு சீக்கு பாறை பகுதியில் உள்ள வியூ பாயிண்டிற்கு அழைத்துச் சென்று, சுமார் 250 அடி பள்ளத்தில் தூக்கி எறிந்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் அரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி – பாக்கியம் என்னும் தம்பதியினருக்கு 8 வயதில் ஒரு மகனும் 5 வயதில் ஒரு மகனும் இருந்துள்ளனர். சிரஞ்சீவிக்கும் பாக்கியத்திற்கும் அடிக்கடி சண்டை நடக்குமாம். கடந்த நவம்பர் மாதம் இவர்கள் இரண்டு பேருக்கும் இடையே சண்டை முற்றியதால், ஆத்திரமடைந்த  சிரஞ்சீவி மனைவியைப் பழிவாங்கும் நோக்கில், தனது இரண்டு குழந்தைகளையும் வெளியே அழைத்துச் சென்றுள்ளார். குழந்தைகளை செம்மேடு சீக்கு பாறை பகுதியில் உள்ள வியூ பாயிண்டிற்கு அழைத்துச் சென்று, சுமார் 250 அடி பள்ளத்தில் தூக்கி எறிந்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். குழந்தைகள் காணாமல் போனதால் சந்தேகம் அடைந்த மனைவி  கொல்லிமலை காவல்நிலையத்தில் கணவன் மீது புகார் அளித்துள்ளார். 

ttn

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிரஞ்சீவியை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், தான் குழந்தைகளை மலையிலிருந்து தூக்கி வீசி கொன்றதாகச் சிரஞ்சீவி ஒப்புக் கொண்டுள்ளார். அதன் பின்னர், அம்மலைப் பகுதியில் வசிக்கும் மக்களின் உதவியுடன் போலீசார் குழந்தைகளின் சடலங்களை மீட்டுள்ளனர். அதன் பின்னர், சிரஞ்சீவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ttn

ஒரு மாத காலமாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிரஞ்சீவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பரிந்துரையின் படி , குழந்தைகளைக் கொலை செய்த குற்றத்திற்காக குண்டர் சட்டத்தில் கைது செய்யும் படி மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன் படி, மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிரஞ்சீவியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். 

.