மனைவியுடன் சேர்த்துவைக்கக் கோரி கழுத்தில் வெடிகுண்டு, கையில் பெட்ரோலுடன் மாமியார் வீட்டின் முன் நின்ற கணவன்!

 

மனைவியுடன் சேர்த்துவைக்கக் கோரி கழுத்தில் வெடிகுண்டு, கையில் பெட்ரோலுடன் மாமியார் வீட்டின் முன் நின்ற கணவன்!

நெய்வேலியில் கட்டிய மனைவியுடன் தன்னை சேர்த்துவைக்கக்கோரி மாமியார் வீட்டின் முன்பு கழுத்தில் நாட்டு வெடிகுண்டை சுற்றிக்கொண்டு, கையில் பெட்ரோல் கேனுடன்,   நின்ற கணவனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெய்வேலியில் கட்டிய மனைவியுடன் தன்னை சேர்த்துவைக்கக்கோரி மாமியார் வீட்டின் முன்பு கழுத்தில் நாட்டு வெடிகுண்டை சுற்றிக்கொண்டு, கையில் பெட்ரோல் கேனுடன்,   நின்ற கணவனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெய்வேலியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் குடும்ப பிரச்னை காரணமாக மனைவியை பிரிந்து கடந்த சில நாட்களாக வாழ்ந்துவருகிறார். மணிகண்டனுக்கு இரண்டு வயதில் இரு குழந்தை இருந்துள்ளது. மாமியார் தான் தன் மனைவியுடன் சேர்ந்துவாழ தடையாக இருக்கிறார் என கூறிய மணிகண்டன், மாமியார் வீட்டின் முன்பு வெடிகுண்டுகளை கழுத்தில் மாட்டுக்கொண்டும், கையில் பெட்ரோல் மட்டும் தீப்பெட்டியுடனும் நின்றுக்கொண்டு கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சென்றுகொண்டிருந்த நெய்வேலி நகர முதன்மை காவலர் பாலச்சந்திரன் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மணிகண்டனின் அருகில் சென்று தற்கொலை எண்ணத்தை கைவிடும்படி கூறினார். ஆனால் மணிகண்டன் தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கவே, அவரை சமாதனப்படுத்துவதற்காக அவருடைய இரண்டுவயது குழந்தையை தூக்கிக்கொண்டு மணிகண்டன் அருகே சென்றார். 

suicide

இப்போது தீப்பெட்டியை பற்ற வை, நீ, நான் மற்றும் உனது குழந்தை ஆகிய மூவரும் மரணமடைவோம் என ஆத்திரமாக பேசினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன் தன் குழந்தையை தூக்கி கொஞ்சினார். அதன்பின் தற்கொலையை முயற்சியை கைவிட்டார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவலர்கள் மணிகண்டன் மீது தண்ணீரை ஊற்றி வெடிகுண்டையும் பெட்ரோலையும் அவரிடமிருந்து அகற்றினர். ஒருவழியாக பிரச்னை முடிந்தது என பெருமூச்சிவிட்ட காவலர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி….  மணிக்கண்டன் தான் ஏற்கனவே விஷம் அருந்தியதாக கூறியதால் அதிர்ச்சியடைந்த காவலர்கள் அவரை மீட்டு நெய்வேலி என்.எல்.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.