மனைவியின் தங்கையிடம் தவறாக நடந்து கொண்ட கணவன்.. சிறுமி கர்ப்பமானதால் போக்சோவில் கைதாகி கம்பி எண்ணும் நபர்!

 

மனைவியின் தங்கையிடம் தவறாக நடந்து கொண்ட கணவன்.. சிறுமி கர்ப்பமானதால் போக்சோவில் கைதாகி கம்பி எண்ணும் நபர்!

ஊரடங்கை பயன்படுத்தி மனைவியின் தங்கையை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊருடங்கு போடப்பட்டுள்ளது. முதலில் மார்ச் மாதம் போடப்பட்டிருந்த ஊரடங்கு, நான்காவது முறையாக மே மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கை பயன்படுத்தி மனைவியின் தங்கையை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

ttn

தென்காசி மாவட்டம் புளிச்சி குளம் பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ்(26) என்பவர் அதே பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சுப்புராஜின் மனைவியின் தாயாருக்கு உடல்நலம் சரியில்லாததால், அவரது மனைவி அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார். இதனிடையே மனைவியின் தங்கை அக்கா வீட்டுக்கு வந்த நிலையில், ஊரடங்கு போடப்பட்டதால் நீண்ட நாட்களாக அங்கேயே தங்கியிருந்துள்ளார். மனைவியின் தங்கைக்கு 16 வயது தான் ஆகிறதாம். 

இந்த சூழலை பயன்படுத்திக் கொண்ட சுப்புராஜ், மனைவியின் தங்கையிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். ஆனால் இதனை அந்த சிறுமி வீட்டில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிறுமி கர்ப்பம் அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில், அக்கா கணவர் தான் இதற்கு காரணம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்புராஜின் மனைவி, மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சுப்புராஜ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.