மனைவியின் காதலனை அரிவாளால் வெட்டி கொலை செய்த கொடூரம்?!

 

மனைவியின் காதலனை அரிவாளால் வெட்டி கொலை செய்த கொடூரம்?!

சன்வி பகுதியில் காய்கறி வியாபாரம் செய்யும் லக்‌ஷ்மன் குதேகாவுக்கு மனைவியும், இரு குழந்தைகளும் இருக்கின்றனர். அவரின் மனைவி அசோக் பிராதர் என்பவரை திருமணத்துக்கு முன்பே காதலித்து வந்துள்ளார். அசோக் ஒரு லாரி ஓட்டுநர். லக்‌ஷ்மனுக்கு தன் மனைவி அசோக் உடன் தொடர்பு வைத்தது தெரிய வந்துள்ளது

உறவுச் சிக்கல்களால் கொலை நிகழ்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. புனேவில் அப்படியான ஒரு சம்பவம்தான் நிகழ்ந்துள்ளது.

சன்வி பகுதியில் காய்கறி வியாபாரம் செய்யும் லக்‌ஷ்மன் குதேகாவுக்கு மனைவியும், இரு குழந்தைகளும் இருக்கின்றனர். அவரின் மனைவி அசோக் பிராதர் என்பவரை திருமணத்துக்கு முன்பே காதலித்து வந்துள்ளார். அசோக் ஒரு லாரி ஓட்டுநர். லக்‌ஷ்மனுக்கு தன் மனைவி, அசோக் உடன் தொடர்பு வைத்தது தெரிய வந்துள்ளது.

dfgg

மனைவியை லக்‌ஷ்மன் கண்டித்துள்ளார், இனி பழகமாட்டோம் என கூறிவிட்டு மீண்டும் பழகி வந்திருக்கிறார்கள். இந்த விஷயத்தை தன் மகன் மூலமாக அறிந்துகொண்டார் லக்‌ஷ்மன், ஆத்திரத்தில் அசோக்கை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

மனைவியிடம் தான் வெளியே போவதாகவும், திரும்பி வர சில மணி நேரங்கள் ஆகும் எனவும் தெரிவித்துவிட்டு அருகிலேயே ஒரு இடத்தில் அமர்ந்திருக்கிறார். லக்‌ஷ்மன் சென்றுவிட்டதாக எண்ணி, அவரது மனைவி, அசோக்கை வர சொல்லியிருக்கிறார்.

அட்

வீட்டின் அருகே வந்த அசோக்கை, லஷ்மன் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். கழுத்து மற்றும் கைகளில் கொடூரமான வெட்டு, உயிருக்கு போராடிய அசோக்கை அங்கிருந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 3 மணி நேர சிகிச்சைக்கு பின் அவர் உயிரிழந்தார். லக்‌ஷ்மன் மீது 302 மற்றும் பிற ஐபிசி செக்சனில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: SK 14 அப்டேட்: பைக் ரேஸராக களமிறங்கும் சிவகார்த்திகேயன்