மனைவிக்கு வியர்க்காமல், 106 நாட்கள் பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த கணவன்!

 

மனைவிக்கு வியர்க்காமல், 106 நாட்கள் பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த கணவன்!

மாமனார் வீட்டிலிருந்து போன் வரும்போதெல்லாம், ‘உங்க பொண்ணுக்கு ஒரு சொட்டுக்கூட வேர்க்காம நான் பாத்துக்குறேங்க மாமா, நீங்க கவலைப்படாதீங்க’ என நாடகமாடினாலும், மாசக்கணக்காக பெண்ணை கண்ணில் காட்டாமலும் பேசவிடாமலும் இருக்கச் செய்ய, விஷயம் போலீசிடம் போய் சிக்கிவிட்டான்.

சீனாவுல ஜூ சியாடோங் அப்டீங்குற ஒரு நன்னாரிப்பய, கட்டின மனைவியை கொன்னு, கண்டம் துண்டமா வெட்டாம முழு பீசா ஃப்ரிட்ஜ்ல வச்சிருந்திருக்கான். அதுவும் ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல,  106 நாட்களுக்கு. இன்னும் ரெண்டு நாள் போயிருந்தா 108 நாளாகியிருக்கும், குழம்பு வச்சு சாப்பிட்ருப்பான் போல. விஷயம் என்னன்னா, அவனுடைய மனைவி லிப்பிங் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே இருந்துள்ளார். சண்டை செய்யாத சம்சாரம் எங்க இருக்கு? இப்ப நாங்கெல்லாம் இல்ல? எவ்வளவு அடிச்சாலும் ஓடுனது கிடையாது, அழுதது கிடையாது. ஆனா, இந்த ஜூ பையன் மட்டும் ரொம்ப கோவக்காரனா இருந்திருக்கான். படக்குனு கழுத்தை நெரிச்சு பொண்டாட்டிய கொன்னுபுட்டான்.

Man accused of killing wife

அடடா, அவசரப்பட்டுட்டோமே என வருந்தியிருக்கிறான். பொண்டாட்டிசெத்ததை நினைத்து அல்ல, வீட்டில் வைத்து கொன்றதற்காக. உடனடியாக கிரிமினல் மூளை வேலை செய்து, மார்க்கெட்டுக்குப் போய் இருக்குறதுலேயே பெரிய சைஸா ஃப்ரிட்ஜ் ஒண்ணை வாங்கிவந்து, மனைவியின் பிணத்தை வைத்துள்ளான். மாமனார் வீட்டிலிருந்து போன் வரும்போதெல்லாம், ‘உங்க பொண்ணுக்கு ஒரு சொட்டுக்கூட வேர்க்காம நான் பாத்துக்குறேங்க மாமா, நீங்க கவலைப்படாதீங்க’ என நாடகமாடினாலும், மாசக்கணக்காக பெண்ணை கண்ணில் காட்டாமலும் பேசவிடாமலும் இருக்கச் செய்ய, விஷயம் போலீசிடம் போய் சிக்கிவிட்டான். நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியிருக்கிறது.