மனித வெடிகுண்டாக மாறி களத்தில் குதித்து சாகவும் தயார்: பிரபல பாலிவுட் நடிகை பரபரப்பு பேட்டி!

 

மனித வெடிகுண்டாக மாறி களத்தில் குதித்து சாகவும் தயார்: பிரபல பாலிவுட் நடிகை பரபரப்பு பேட்டி!

நம் தேசத்துக்காகச் சாக  தயாராக இருக்கிறேன் என்று பாலிவுட் நடிகை ராக்கி  சாவந்த் தெரிவித்துள்ளார்.

மும்பை: நம் தேசத்துக்காகச் சாக  தயாராக இருக்கிறேன் என்று பாலிவுட் நடிகை ராக்கி  சாவந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

army

கடந்த 26ம் தேதி ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படைக் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.

abinanthan

அப்போது விரட்டிச் சென்ற இந்திய விமானத்தைப் பாகிஸ்தான் ராணுவம் சுட்டது. அதிலிருந்த இந்திய விமானி அபிநந்தன் பாராசூட் மூலம் தப்பிய நிலையில் எதிர்பாராத விதமாகப்  பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். அவரை பாகிஸ்தான் சிறை பிடித்தது. தற்போது பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட  இந்திய விமானி அபிநந்தன் இன்று நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

rakhi

இந்நிலையில் புல்வாமா தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், ‘புல்வாமா தாக்குதல் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை, மோடி அவர்களுக்குச் சரியான பதிலை அளித்துள்ளார். அதனால் அவரை ஆதரிக்கிறேன். நான் நம் தேசத்துக்காகச் சாகவும் தயாராக இருக்கிறேன்.  50 -100 வெடிகுண்டுகளுடன் பாகிஸ்தான்  எல்லைக்குச் சென்று, தேவைப்பட்டால் அவர்களை அழித்து விடுவேன். முக்கியமாக விமானி அபிநந்தன் பாதுகாப்பாக இந்தியா  திரும்பி வர கடவுளைப் பிராத்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், பி.ஜே.பி-க்கு ஆதரவு அளிக்கிறோம் என்ற பெயரில் கலவரத்தை தூண்டு விதமாக ராக்கி சாவந்த் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என சமூகவலைத்தளவாசிகள் பலர் கருத்து  தெரிவித்து வருகின்றனர்.