மனிதனுக்கு ஆறு அறிவு இருக்கு… அதனால் ஆறு மொழி கற்கவேண்டும்-பொன். ராதாகிருஷ்ணன்

 

மனிதனுக்கு ஆறு அறிவு இருக்கு… அதனால் ஆறு மொழி கற்கவேண்டும்-பொன். ராதாகிருஷ்ணன்

மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளது. அதனால் ஆறு மொழிகள் படித்தாக வேண்டும் என பாஜக மூத்த தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பொன். ராதாகிருஷ்ணன், “காந்தி பிறந்த நாள் அன்று யாத்திரை தொடங்கும். தமிழகத்தில் யாத்திரை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவர் அரசு குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மற்றும் 8 வகுப்பு தேர்வுகளை பொது தேர்வாக நடத்தினால் என்ன தவறு. கொடிகள், ஒலிபரப்பி, பேனர்கள் கண்டிப்பாக அனைத்து வைக்க கூடாது. சுபஸ்ரீ இறந்திருப்பது சாபம்,  இந்த நிகழ்வால் உலக அளவில் தலை குனிவு ஏற்பட்டுள்ளது. மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளது. ஆறு மொழிகள் படித்தாக வேண்டும். பாஜக தலைவர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும். இதுகுறித்து கட்சியின் தலைமை முடிவெடுக்கும். 

Pon Radhakrishnan

பிரதமர் உலகில் பழமையான மொழி தமிழ் என பலமுறை கூறியுள்ளார். சமஸ்கிரத்தை விட பழமையான மொழி தமிழ் என மோடி கூறியுள்ளார். கழுகு எங்கு பறந்தாலும் பார்வை பிணத்தில் மீது என்பது போல தமிழை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் திமுகவினர்” எனக்கூறினார்.