மனமகிழ் மன்றம் பெயரில் மஜா. உத்தர பிரதேசத்தில் 35 பேர் கைது!

 

மனமகிழ் மன்றம் பெயரில் மஜா. உத்தர பிரதேசத்தில் 35 பேர் கைது!

கைப்பற்றப்பட்ட ஆட்சேபத்துக்குரிய பொருட்கள் தவிர்த்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், ஆணுறைகளும் சேர்த்தி. விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டில் 3 சென்டர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதெல்லாம் சரி, காண்டமே கணக்குல வந்திடுச்சி, அதென்ன ஆட்சேபத்துக்குரிய பொருட்கள்?

உத்தர பிரதேசத்தின் கவுதம புத்தர் நகரில் செயல்பட்டு வந்த மசாஜ் சென்டர்கள்மீது தொடர்ச்சியாக புகார்கள் குவிந்தவண்ணம் இருந்ததால், என்ன ஏதென்று விசாரிக்க 15 சிறப்பு காவல்படைகள் அதிரடியாக ஒரே நேரத்தில் களத்தில் இறங்கின. சுற்றுவட்டாரத்தில் இயங்கிவந்த 14 மசாஜ் சென்டர்களில் ஒரே நேரத்தில் நடந்த சோதனையின்போது, மூன்று மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடப்பதும், மற்ற மசாஜ் சென்டர்களில் ஆட்சேபத்துக்குரிய பொருட்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

35 arrested

சோதனையின் முடிவில் வெளிநாட்டினரையும் சேர்த்து 10 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் உள்ளிட்ட 35 பேர் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட ஆட்சேபத்துக்குரிய பொருட்கள் தவிர்த்து ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், ஆணுறைகளும் சேர்த்தி. விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டில் 3 சென்டர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதெல்லாம் சரி, காண்டமே கணக்குல வந்திடுச்சி, அதென்ன ஆட்சேபத்துக்குரிய பொருட்கள்?