மனநிலை சரியில்லாதவரை பாலியல் வன்கொடுமை செய்த மனசாட்சியில்லாத வாலிபர்…  

 

மனநிலை சரியில்லாதவரை பாலியல் வன்கொடுமை செய்த மனசாட்சியில்லாத வாலிபர்…  

மும்பையில் 40 வயதான மனநிலை சரியில்லாத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 35 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர், ஜனவரி 12 ம் தேதி தனது தாயார் வேலைக்குச் சென்றிருந்தபோது, அவரை முத்தமிட்டு, தகாத முறையில் தொட்டார் .பிறகு அவரின் தாயார்  வீடு திரும்பியதும் அந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் தனது தாயிடம் கூறினார் 

மும்பையில் 40 வயதான மனநிலை சரியில்லாத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 35 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர், ஜனவரி 12 ம் தேதி தனது தாயார் வேலைக்குச் சென்றிருந்தபோது, அவரை முத்தமிட்டு, தகாத முறையில் தொட்டார் .பிறகு அவரின் தாயார்  வீடு திரும்பியதும் அந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் தனது தாயிடம் கூறினார் 
“பெண்ணின் தாய் வீட்டு உதவியாளராக பணிபுரிவதால் பெரும்பாலும் வெளியே இருப்பார் . குற்றம் சாட்டப்பட்டவர் இதை நோட்டமிட்டு , ஜனவரி 12ம் தேதி  இரவு 9.30 மணியளவில் அவர்களது இல்லத்திற்குச் சென்று, அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.  இந்த விவகாரம் தொடர்பாக அந்த பெண்ணின் தாய் அவரிடம்  விசாரித்தபோது குற்றம் சாட்டப்பட்டவர் மன்னிப்பு கேட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது மகளை மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தக்கூடும் என்று அஞ்சுவதால் , புதன்கிழமை அவர் மீது வழக்கு பதிவு செய்ததாக அந்த பெண்ணின் தாய் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார்.