மனஅழுத்தமா ?கவலை வேண்டாம், பிடித்த ஆணை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்!

 

மனஅழுத்தமா ?கவலை வேண்டாம், பிடித்த ஆணை வாடகைக்கு எடுத்து கொள்ளலாம்!

மன அழுத்தத்தில் உள்ள பெண்கள், தனக்கு பிடித்த ஆணை தேர்வு செய்து வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்ற முறை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை : மன அழுத்தத்தில் உள்ள பெண்கள், தனக்கு பிடித்த ஆணை தேர்வு செய்து வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்ற முறை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தத்திலிருந்து விடுபட RABF ஆப்பை மும்பையைச் சேர்ந்த  குஷால் பிரகாஷ் என்ற இளைஞன் கடந்த ஆண்டு வெளியிட்டிருக்கிறார். பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆப்பின் மூலம்  பெண்கள் மன வருத்தத்திலோ, மன அழுத்தத்திலோ இருந்தாலோ, தனக்குப் பிடித்த ஆணை அந்த ஆப்பில் சென்று தேர்வு செய்து வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

rabf

அவர்களுடன் தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். அந்த பெண் ஆணை தேர்வு செய்யும்போது எந்த இடம் என்பதை குறிப்பிட வேண்டும். அது மக்கள் கூடும் பொது இடமாக இருக்க வேண்டும். அதேபோல் எங்கள் ஊழியர்களும் அவர்கள் சொன்ன இடத்தில்தான் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்வார்கள்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

RABF (Rent A Boy|Friend) is launched on 15th August. Don’t judge our Website/App by it’s name! Now this is what i need the attention for, Rent A Boy|Friend has a thin line in between which implies restrictions (NO Physicality & NO Private place meets). Our main purpose is to eradicate Depression and provide a Pure friendship to the happy people as well. Let’s stand for Awareness! Our app will be launched on iOS and Android on 24th August 2018. Visit us: www.rentabf.in For more details, tune in to our Media Press Conference on YouTube. #rabflaunch #instarabf #followrabf #rabfmumbai #rabfpune #rentalboyfriendindia #pressconference #rabfconnect #rabfmembers #myrabf @rabf24

A post shared by RABF Official (@rabfofficial) on

இதில்  20 முதல் 25 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் மட்டும்தான் இருக்கின்றனர். இதில் கல்லூரி செல்லும் ஆண்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் ஆண்களே பகுதி நேர வேலையாகச் செய்கின்றனர். இதில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 500 முதல் 3000 வரை வசூலிக்கப்படுகிறது.

kushal

இது குறித்து கூடியுள்ள குஷால், ‘இந்த ஆப் டேட்டிங் செய்வதற்கோ, செக்ஸிற்காகவோ தொடங்கப்பட்டது அல்ல. அப்படி ஒருபோதும் இயங்காது. இதன் நோக்கம்,  தனிமையில் இருப்போர், மன அழுத்தத்தில் இருப்போருக்கு ஆறுதலாக  ஒரு துணையை தேர்வு செய்து கொள்ளலாம் என்பதே. அவர்கள் உங்களுக்கு அந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட ஆலோசனைகள், அறிவுரைகளை வழங்குவார்கள். நட்பு பாராட்டுவார்கள்’ என்றார்.