மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா உறுதி!

 

மத்திய பிரதேச முதல்வர்  சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 12,87,945 லிருந்து 13,36,861 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 8,49,432 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,358 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,916 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 757 பேர் பலியாகியுள்ளனர்.

மத்திய பிரதேச முதல்வர்  சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா உறுதி!

சாதாரண மக்கள் முதல் ஆளுநர் மாளிகை வரை பாரபட்சமின்றி பரவும் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டள்ளன . இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தனக்கு கொரோனா உறுதியானதால் மருத்துவர்களின் அறிவுரைப்படி தன்னைத்தானே தனிமை படுத்திக் கொண்டதாகவும் கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டங்களை காணொலி மூலமாக நடத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.