மத்திய பிரதேசம், மிசோரமில் தொடங்கியது வாக்குப்பதிவு

 

மத்திய பிரதேசம், மிசோரமில் தொடங்கியது வாக்குப்பதிவு

மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

போபால்: மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி சத்தீஸ்கரில் நவம்பர் 12 மற்றும் 20-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. ராஜஸ்தானுக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸூம் தீவிர பிரசாரம் செய்தன, மிசோரம் மாநிலத்திலும் இரு கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டன.

இந்நிலையில், மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இன்று தேர்தல் தொடங்கியது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு சென்று  வாக்களித்து வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைய இருக்கிறது. மேலும் மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட 1.80 லட்சம் பேர் தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.. 

மிசோரம் மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமானது. அங்கு வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைகிறது. இந்த இரு மாநில தேர்தல்களின் வாக்குகளும் டிசம்பர் 11-ம் தேதி எண்ணப்பட இருக்கின்றன.