மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறும்: சிவராஜ் சவுகான் நம்பிக்கை

 

மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறும்: சிவராஜ் சவுகான் நம்பிக்கை

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என சிவராஜ் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என சிவராஜ் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 28-ம் தேதி நடைபெற்றது.  மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 75% வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி மத்திய பிரதேசத்தில் பாஜக 36 தொகுதிகளிலும், காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்கும் என பாஜகவினர் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதற்கிடையே மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கும், காங்கிரஸூக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. மத்திய பிரதேசத்தின் புத்னி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் சிவராஜ் சவுகான் முன்னிலை வகித்து வருகிறார்.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் கூறுகையில், மத்திய பிரதேசத்தில் பாஜக நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒருவேளை பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டால், பாஜகவிலிருந்து விலகி தேர்தலை சந்தித்த சுயேச்சைகளை இணைத்து மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது.