மத்திய அரசு..டாக்டர் மன்மோகன் சிங்கின் ஞானத்தைக் கேட்க வேண்டும்..ப.சிதம்பரம் ட்வீட்..

 

மத்திய அரசு..டாக்டர் மன்மோகன் சிங்கின் ஞானத்தைக் கேட்க வேண்டும்..ப.சிதம்பரம் ட்வீட்..

தற்போதைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாடு வெளியேறுவதற்கான வழியை யாராவது காட்ட முடிந்தால், அது டாக்டர். சிங் ஆல் மட்டுமே முடியும்

காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் , இந்தியாவின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், இன்று தனது 87 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு, பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். 

இ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப் பட்ட மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது குடும்பத்தினர் மூலம் மன்மோகன் சிங்குக்கு  ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

Chidambaram tweet

அதில், ‘எனது சார்பாக ட்வீட் செய்ய எனது குடும்பத்தினரை நான் கேட்டுக்கொண்டேன்: டாக்டர் மன்மோகன் சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாழட்டும், டாக்டர் மன்மோகன் சிங்கின் ஞானத்தைக் கேட்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன். தற்போதைய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாடு வெளியேறுவதற்கான வழியை யாராவது காட்ட முடிந்தால், அது டாக்டர். சிங் ஆல் மட்டுமே முடியும் என்று, ப.சிதம்பரம் சார்பாக அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.