மது போதையில் தகராறு : நண்பனின் தலையில் கல்லைப்போட்டுக் கொன்ற நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

 

மது போதையில் தகராறு : நண்பனின் தலையில் கல்லைப்போட்டுக் கொன்ற நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

போதையிலிருந்த மாரிமுத்துவின் நண்பர்கள் அவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். 

கிருஷ்ணகிரி அடுத்த காமராஜ் நகர் என்னும் பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து. டெம்போ  ஓட்டுநராக பணியாற்றி வரும் இவர் வழக்கமாக அவரது நண்பர்களுடன் மது அருந்துவார் என்று கூறப்படுகிறது. அதே போல, நேற்று முன் தினம் அவர் வீட்டின் அருகே இருக்கும் மைதானத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது, மாரிமுத்துவிற்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், போதையிலிருந்த மாரிமுத்துவின் நண்பர்கள் அவர் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். 

ttn

நேற்று காலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் மாரிமுத்துவின் உடல் அங்கே கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து  கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், மாரிமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும், இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.