மதுவில் விஷம் வைத்து அதிமுக பிரமுகர் கொலை; திமுக நிர்வாகி கைது!

 

மதுவில் விஷம் வைத்து அதிமுக பிரமுகர் கொலை; திமுக நிர்வாகி கைது!

6-வது வார்டில் இருக்கூரை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சத்யா  சத்யாவும் போட்டியின்றி தேர்வானார். 

பரமத்திவேலூர் அருகே கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருக்கூர் ஊராட்சியில் கடந்த மாதம் 27-ந் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 2-வது வார்டில் சுப்பையாம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ராஜாமணி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் 6-வது வார்டில் இருக்கூரை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சத்யா  சத்யாவும் போட்டியின்றி தேர்வானார். 

ttn

இதில் ஆறுமுகம்  ஏற்கனவே  ஊராட்சி மன்ற துணைத்தலைவராக இருந்ததால் தனது மனைவியை துணைத்தலைவராக தேர்தெடுக்க ஆதரவு அளிக்குமாறு செந்தில்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு செந்தில்குமார் மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில் குமார்,  கடந்த 30 ஆம் தேதி ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றும் சரவணனுடன் சேர்ந்து கொண்டு செந்தில் குமாரையும், அவரது நண்பர் தியாகராஜனையும் மதுகுடிக்க அழைத்துள்ளார். அப்போது மதுவில்  விஷம் கலந்துகொடுக்க இருவரும் குடித்து விட்டு அங்கேயே மயங்கியுள்ளனர். 

ttn

இதை தொடர்ந்து செந்தில்குமார் மற்றும் தியாகராஜனை கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்த நிலையில் மெலிகிசிகிச்சைக்காக அவர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.  இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாகப் பலியானார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பரமத்தி போலீசார் தலைமறைவான சரவணன், ஆறுமுகம்  இருவரையும் தேடி வந்த நிலையில்  செந்தில்குமார் இறந்ததால் கொலை முயற்சி வழக்கை   கொலை வழக்காக மாற்றி இருவரையும் கைது செய்தனர்.  இறந்த செந்தில்குமார் தியாகராஜன் ஆகியோர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பதும் ஆறுமுகம் தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.