மதுரை வரும் 19 ஆம் தேதி முதல் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

 

மதுரை வரும் 19 ஆம் தேதி முதல் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் படி உணவு பொருட்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்று அரசுஉத்தரவிட்டது.

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் படி உணவு பொருட்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்று அரசுஉத்தரவிட்டது. அதன் படி, அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஞாயிற்றுக் கிழமைகளில் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. 

ttn

இதையடுத்து கொரோனோ தடுப்பு நடவடிக்கையாக வரும் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி மீன் கடைகளை திறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டார். மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் கடைகள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டமாக நிற்பதாகவும், இது கொரோனா பரவ வழிவகுக்கும் என்பதால் மூடப்படுவதாகவும் ஆட்சியர் வினய் விளக்கமளித்துள்ளார்