மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் !

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் !

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று காலை கோவிலின் இ-மெயிலுக்கு ஒரு மெயில் வந்துள்ளது.

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு இன்று காலை கோவிலின் இ-மெயிலுக்கு ஒரு மெயில் வந்துள்ளது. அதனை அதிகாரிகள் திறந்து பார்த்துள்ளனர். அதில், மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளே வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப் பட்டிருந்துள்ளது. இது குறித்து, கோவில் அதிகாரிகள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். 

temople

விரைந்து சென்ற காவல் துறையினர் கோவில் முழுவதும் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆனால், அதில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை என்று காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ttn

கோவிலின் உட்பகுதிகளில் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனையைத் தொடர்ந்து வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டலின் காரணமாகக் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.