மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு?!..

 

மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு?!..

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் அதிகாரி நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

தமிழகத்தில் கடந்த 18-ஆம் தேதி 38 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிவடைந்தது. மதுரை மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன.
இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் அதிகாரி நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

இதையடுத்து சம்மந்தப்பட்ட அந்த பெண் அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனைத்தொடர்ந்து, பெண் தாசில்தார் பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் அவருக்கு உதவியதாக 3 அதிகாரிகள் பிணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

jkafhj

இதற்கிடையே, மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் தாசில்தார் சென்றது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். விசாரணை முடிந்த பின்பு வாக்குச்சாவடியில் வட்டாட்சியர் சம்பூர்ணம் அனுமதியின்றி நுழைந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் நடராஜன், துணை தேர்தல் அதிகாரி, ஆட்சியரின் உதவியாளர், காவல் உதவி ஆணையர் ஆகியோரை மாற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.