மதுரை எம்.பி-யின் உணவு வழங்கும் திட்டத்துக்கு ரூ.5 லட்சம் கொடுத்த நடிகர் சூர்யா!

 

மதுரை எம்.பி-யின் உணவு வழங்கும் திட்டத்துக்கு ரூ.5 லட்சம் கொடுத்த நடிகர் சூர்யா!

மாமதுரையின் அன்னவாசல் திட்டம் மே 1ம் தேதி தொடங்கப்பட்டது. ஆதரவு தேவைப்படும் விளிம்புநிலை மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மதியவுணவு வழங்கும் இத்திட்டமானது, 3000 பேருக்கு உணவு வழங்கித் தொடங்கப்பட்டது.

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் நடத்தி வரும் அன்னவாசல் திட்டத்தின் மூலம் ஏழைகளுக்கு உணவு வழங்க நடிகர் சூர்யா ரூ.5 லட்சம் வழங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இது குறித்து மதுவரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், “மாமதுரையின் அன்னவாசல் திட்டம் மே 1ம் தேதி தொடங்கப்பட்டது. ஆதரவு தேவைப்படும் விளிம்புநிலை மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மதியவுணவு வழங்கும் இத்திட்டமானது, 3000 பேருக்கு உணவு வழங்கித் தொடங்கப்பட்டது.

mp-venkatesan-89

இன்றைய நிலையில் நாள்தோறும் 4500 பேருக்கு முட்டையுடன் மதியவுணவு வழங்கப்படுகிறது. 400-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உணர்வுப்பூர்வமாக இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். “ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்” என்பது வள்ளுவன் மொழி. ‘அகரம்’ மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா. இப்போது ‘ஆகாரம்’ மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார்.

நல்ல முன்னெடுப்புக்கள் பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நகரும். அப்படியான நகர்வில், தன் பங்களிப்பாக 5 லட்ச ரூபாயை நன்கொடையாக அன்னவாசலில் சோறூட்ட அளித்து மகிழ்ந்திருக்கின்றார் திரைக்கலைஞர் சூர்யா. அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.