மதுரையை சேர்ந்த 54 வயது தமிழருக்கு கொரோனா உறுதி!

 

மதுரையை சேர்ந்த 54 வயது தமிழருக்கு கொரோனா உறுதி!

சீனாவின் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுக்க கொத்துக்கொத்தாக மக்களை பலியாக்கி வருகிறது. மேலும், இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இத்தாலி நாடு இந்த  வைரஸால் வரலாறு காணாத மக்கள் இழப்பைச் சந்தித்து வருகிறது. உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கோரத்தாண்டவம் ஆடும் இந்த வைரஸிற்கு பல உயிர்கள் பலியாகி வருகின்றன. இந்தியாவில் 450க்கும் மேற்பட்டோருக்கும் தமிழகத்தில் இதுவரை 11 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா வைரஸ்
இந்நிலையில் மதுரையை சேர்ந்த 54 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்திற்குள்ளேயே இருந்து கொரோனா பரவிய முதல் நபர் இவராவார், இவருக்கும் எந்த வெளிநாட்டு தொடர்பும் இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.