மதுரையில் பள்ளி பால்கனி இடிந்து விழுந்து விபத்து: 3 மாணவர்கள் படுகாயம்!

 

மதுரையில் பள்ளி பால்கனி இடிந்து விழுந்து விபத்து: 3 மாணவர்கள் படுகாயம்!

அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பால்கனி இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

மதுரை: அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பால்கனி இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் எதிரே அரசு உதவி பெறும் ஆயிர வைசிய வெள்ளியம்பலம் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 150 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று (ஜூன் 26) காலை வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது திடீரென்று எதிர்பாரா விதமாகப் பள்ளியின் பால்கனி சுவர் இடிந்து கீழே விழுந்துள்ளது. அதில் அங்கு இருந்த 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சக்திவேல், குமரவேல், வீரக்குமார் ஆகியோருக்கு பலத்த காயம் அடைந்துள்ளனர். 

இதையடுத்து அந்த பள்ளி ஆசிரியர்கள்  அந்த மூன்று மாணவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.