மதுரையில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது!

 

மதுரையில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது!

மதுரையில் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் குழந்தை பிறந்துள்ளது

மதுரை அனுப்பானடி சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் மதுரை அரசு ராஜாஜி கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. 2 கிலோ 800 கிராம் எடையில் பிறந்த குழந்தையும் , தாயும் நலமுடன் இருப்பதாகவும் , இருவருக்கும் மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தொடர் சிகிச்சைகள் அளித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று பிறந்த குழந்தைக்கு 24 மணி நேரத்துக்குப் பின்னர் கொரோனா தொற்று தாக்கம் உள்ளதா என்பது குறித்து பரிசோதனை நடத்தப்படும் என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 

baby

இதேபோல்  கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அம்பாசமுத்திரம் புதூரை சேர்ந்த கர்ப்பிணிக்கு நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு  கொரோனா நோய்த் தொற்று உள்ளதா என்பது குறித்த பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும், அது குறித்த மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன் குழந்தைக்கு பாதிப்பு உள்ளதா என்பது குறித்து தெரிவிக்கப்படும் என்றும் தலைமை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.