மதுரையில் அழகிரி ஆதரவாளர் வீரன் வெட்டி படுகொலை: பின்னணி என்ன?

 

மதுரையில் அழகிரி ஆதரவாளர் வீரன் வெட்டி படுகொலை: பின்னணி என்ன?

அழகிரி ஆதரவாளரும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான மதுரை வீரன் இன்று காலை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரை: அழகிரி ஆதரவாளரும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான மதுரை வீரன் இன்று காலை படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சி காலத்திலும் சரி, தற்போதும் சரி மதுரை சுற்று வட்டார பகுதிகளில் அழகிரியின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர் மதுரை வீரன். பாலமேட்டை அடுத்த சத்திர வெள்ளாளப்பட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவராகவும் மதுரை வீரன் இருந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை தனது வீட்டின் முன் உள்ள தேநீர் கடைக்கு அவர் சென்ற போது, வழிமறித்த 5 பேர் கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.

madurai

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மதுரை வீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக அதே ஊரை சேர்ந்த ஜோதிமணி என்பவர் கூலிப்படையை ஏவி மதுரை வீரனை கொலை செய்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவான ஜோதிமணி மற்றும் கூலிப்படையினரை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.   

இரண்டு மாதங்களுக்கு முன்னர் மதுரை வீரனின் மகளுக்கு மு.க.அழகிரி தலைமையில் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பேசிய அழகிரி, “மதுரை வீரன் போன்ற வீரர்கள் என்னுடன் இருக்கும்போது என்னை யாரும் அசைக்க முடியாது” என பேசியிருந்தார். இந்நிலையில், மதுரை வீரன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.