மதுரையிலும் ஓர் குன்றத்தூர் அமிராமி: மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் கைது!

 

மதுரையிலும் ஓர் குன்றத்தூர் அமிராமி: மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கள்ளக்காதலனுடன் கைது!

மதுரை: குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தாயையும் அவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர். 

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த சருகுவலையபட்டியை சேர்ந்த ராகவநத்தம். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும் மூன்று  குழந்தைகளும் உள்ளனர்.  ராகவநத்தம் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். கடந்த 2016ம் ஆண்டு ராகவநத்தத்தின் பார்கவி, யுவராஜா ஆகிய இரண்டு குழந்தைகளும்  எலி மருந்தைச் சாப்பிட்டதில் உயிரிழந்தனர். வெளியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் தெரியாமல் எலி மருந்தைச்  சாப்பிட்டதாகத் தாய் ரஞ்சிதா தெரிவித்தார். 

இதையடுத்து ராகவநத்தம், தமது குழந்தைகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணையில் இறங்கினர். அதில்  ரஞ்சிதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கல்யாணகுமாருக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரியவந்தது. மேலும் தங்கள் கள்ளக்காதலுக்குக் குழந்தைகள் இடையூறாக இருப்பதாகக் எண்ணிய இருவரும் . மேலும் இருவரும், குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றதும் விசாரணையில் அம்பலமானது. 

இந்நிலையில் குழந்தைகள் கொலை வழக்கில்  ரஞ்சிதாவையும், அவரது கள்ளக்காதலன் கல்யாணகுமாரையும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.