மதுமிதா சீட்டிங் செய்து தான் கேப்டன் ஆனார்?  வீடியோ போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

 

மதுமிதா சீட்டிங் செய்து தான் கேப்டன் ஆனார்?  வீடியோ போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

பிக் பாஸ் 3 சீசன் தொடங்கி 54 நாள் கடந்துவிட்டது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன் மற்றும் சரவணன் ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

பிக் பாஸ் 3 சீசன் தொடங்கி 54 நாள் கடந்துவிட்டது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன் மற்றும் சரவணன் ஆகியோர் வெளியேறியுள்ளனர். அதைத்தொடர்ந்து 10 பேருடன் இந்த நிகழ்ச்சி நகர்ந்து செல்கிறது. இந்த நிலையில் இதில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி மட்டும் வனிதா உள்ளே சென்றுள்ளனர். 

இந்த நிலையில் கடந்த வாரத்துடன் சாண்டியின் பதவி காலம் முடிந்ததால் இந்த வார தலைவர் போட்டிக்காக தர்ஷன், ஷெரின் மற்றும் மதுமிதா ஆகியோர் பங்குபெற்றனர். அந்த டாஸ்கில் போட்டியாளர்கள் CAPTAIN என்கிற வார்த்தையில் உள்ள எழுத்துக்களைச் சரியாகக் கண்ணை மூடிக்கொண்டு எடுத்து சென்று பொருத்தவேண்டும் என்று கூறப்பட்டது. அந்த டாஸ்கில் மற்ற போட்டியாளர்கள் திணறிய நிலையில் மதுமிதா மட்டும் எழுத்துக்களைச் சரியாக எடுத்து சென்று பொருத்தி போட்டியில் வெற்றி பெற்றார்.

அவரின் வெற்றி சேரன் தவிர மற்ற யாருக்கும் பிடிக்காததால் மதுவிடம் இருந்து ஒதுங்கி வந்து விட்டனர். தற்போது அவர் சீட்டிங் செய்து ஏமாற்றித் தான் போட்டியில் வெற்றி பெற்றார் என்று ஒரு வீடியோ ஆதாரத்தை நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில்,’மதுமிதா எழுத்துக்களை நேராக எடுத்து சென்று பொருத்துவது போல் உள்ளது. அதுமட்டுமின்றி தர்ஷன் கையிலிருந்த எழுத்தையும் பிடுங்கிக்கொண்டு செல்வது போல் அதில் உள்ளதால் மதுமிதாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.