மதுமிதாவை வீட்டை விட்டு வெளியேற்றச் சதி திட்டம் திட்டும் ஹவுஸ் மேட்ஸ்? 

 

மதுமிதாவை வீட்டை விட்டு வெளியேற்றச் சதி திட்டம் திட்டும் ஹவுஸ் மேட்ஸ்? 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தொடங்கி விறுவிறுப்பாக 11 நாள் கடந்து விட்டது. கோபம், அன்பு, பொறாமை, காதல், சண்டை என்று போட்டியாளர்கள் செய்யும் சிறு செயலை வைத்தே அவர்களின் குணத்தை மக்கள் புரிந்து கொண்டனர். அதில் ரசிகர்கள் மனதில் மிகவும் வெறுப்பைச் சம்பாதித்துள்ளது மீரா, அபிராமி மற்றும் வனிதா. ஏனென்றால் இவர்கள் மற்ற ஹவுஸ் மேட்ஸ்யுடன் காரணமே இல்லாமல் சண்டை போடுவது தான். 

இவர்களை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் அபி மற்றும் மீரா இருப்பதால் கண்டிப்பாக இவர்களுள் ஒருவரை வெளியேற்றியே தீருவோம் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர். மேலும் இந்த லிஸ்டில் ‘தமிழ் பொண்ணு’ என்று ஒரு வார்த்தை சொல்லி தானாக வந்து மாட்டிக்கொண்டவர் ஜாங்கிரி மதுமிதா. இவரின் இந்த ஒரு சொல்லால் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அவரை டார்கெட் செய்து நாமினேட் செய்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து இன்றைக்கான இரண்டாவது புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், சாண்டி மாஸ்டர், இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் 7பேரில் யாரையாவது ஒருத்தரை வெளியேற்ற வேண்டும் என்று டாஸ்க் லெட்டரை வாசிக்கிறார். இதனால் ஒன்றுகூடிய ஹவுஸ் மேத்ஸ், வழக்கம் போல் மீரா, மது என்று கூறி வருகின்றனர். இதில் அவர்கள் பேசியதை வைத்துப் பார்க்கும் பொழுது அனைவரும் மதுமிதா என்றே கூறி வருகின்றனர். 

அதைத்தொடர்ந்து connfession ரூமிற்குள் சென்ற சாண்டியிடம் இது டாஸ்க் என்றும் சும்மா சொன்னதாகக் கூறினார். பிறகு சாண்டியும் தனக்கு கொடுத்த டாஸ்க் அடிப்படையில் நடித்துக் கோபப்படுவது போல் புரோமோ முடிந்துள்ளது. இதன்மூலம் வீட்டில் அனைவரும் மதுமிதாவை  வெளியேற்ற நினைப்பது வெட்ட வெளிச்சமாக வெளிவந்துள்ளது.