மதுபோதையில் வந்த இளைஞரை அடித்து மண்டியிட வைத்த காவல் ஆய்வாளர்: சேலத்தில் பரபரப்பு!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தங்கமாபுரி பட்டினம் பகுதியில் அர்த்தநாரி என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
சேலம்: மது போதையில் வந்த இளைஞரை உதவி ஆய்வாளர் ஒருவர் நடுரோட்டில் நிற்க வைத்து அடித்த காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தங்கமாபுரி பட்டினம் பகுதியில் அர்த்தநாரி என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்பொழுது மதுபோதையில் வந்த இளைஞரை உதவி ஆய்வாளர் நடுரோட்டில் வைத்து அடித்து மண்டியிட வைத்துள்ளார். மேலும் அவரை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விடியோவானது தற்போது வைரலாகியுள்ளது. இளைஞரை அநாகரீமாக நடத்திய காவல்துறை ஆய்வாளருக்கு எதிராக பலரும் கருத்து கூறி வருகின்றனர். மேலும் மனித தன்மையின்றி நடந்துகொண்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.