மதுபோதையில் மயங்கிய தந்தை: டாஸ்மாக் முன்பு 5 வயது சிறுவன் கடத்தல்

 

மதுபோதையில் மயங்கிய தந்தை: டாஸ்மாக் முன்பு 5 வயது சிறுவன் கடத்தல்

மதுபோதையில் தந்தை மயங்கி கிடந்த சூழலை பயன்படுத்திய மர்ம நபர் ஒருவர், அவரின் 5 வயது மகனை கடத்திச் சென்றுள்ளார். 

காஞ்சிபுரம்: மதுபோதையில் தந்தை மயங்கி கிடந்த சூழலை பயன்படுத்திய மர்ம நபர் ஒருவர், அவரின் 5 வயது மகனை கடத்திச் சென்றுள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம் பாலூர் அருகே உள்ள சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் குமரபிரசாத். இவருக்கு முருகம்மாள் என்ற மனைவியும், குமரகுரு என்ற 5 வயது மகனும் இருக்கின்றனர். 

இந்த நிலையில், இன்று ஒரகடம் டாஸ்மாக் மதுக்கடைக்கு தனது மகனை அழைத்துச் சென்ற குமரபிரசாத், மது வாங்கி சாலையிலேயே குடித்துவிட்டு மயங்கியுள்ளார். தந்தை போதையில் கிடப்பதை பார்த்த சிறுவன் தவித்துள்ளான். 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்த மர்ம நபர் ஒருவர், சிறுவனை தன்னுடன் அழைத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார். தந்தையும், மகனும் சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த மனைவி முருகம்மாள், இருவரையும் தேடியுள்ளார். 

அப்போது, போதையில் மதுக்கடை முன்பு கிடந்த கணவனை எழுப்பி விசாரித்த போது தான், சிறுவன் காணாமல் போனது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளின் உதவியோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.