மதுபோதையில் தந்தை, மகனை தாக்கிய கிரிக்கெட் வீரர் ! 2 வது முறையாக வம்பிழுத்து சாதனை ! 

 

மதுபோதையில் தந்தை, மகனை தாக்கிய கிரிக்கெட் வீரர் ! 2 வது முறையாக வம்பிழுத்து சாதனை ! 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரவீன்குமார், தன்னையும், தன்னுடைய மகனையும் குடிபோதையில் தாக்கியதாக உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த தீபக் சர்மா என்பவர் புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரவீன்குமார், தன்னையும், தன்னுடைய மகனையும் குடிபோதையில் தாக்கியதாக உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த தீபக் சர்மா என்பவர் புகார் அளித்ததின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

praveen kumar

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான பிரவீன் 68 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். 6 டெஸ்ட் போட்டிகளில், விளையாடிய பிரவீன் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். அவர் இங்கிலாந்தில் 3 டெஸ்ட் போட்டிகளில் 15 விக்கெட்டுகளையும், வெஸ்ட் இண்டீஸில் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர். கடந்த அக்டோபர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிரவீன் 2007ம் ஆண்டும் 5வது ஒருநாள் போட்டியில் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்துள்ளார்.

praveen kumar

இதற்கிடையே பிரவீண்குமாரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் தீபக் சர்மா அவர் மீது போலிசில் புகார் அளித்துள்ளார். காரில் வந்து இறங்கிய பிரவீண்குமார் குடிபோதையில் இருந்ததாகவும், தேவையின்றி தன்னிடம் வம்பிழுத்து தகராறில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் தன்னையும், தன்னுடைய 7 வயது மகனையும் கீழே தள்ளிவிட்டு காயம் ஏற்படுத்தியதாக புகார அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து புகார் அளித்தும் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் கடந்த 2008ம் ஆண்டில் பிரவீன் மருத்துவர் ஒருவரை குடிபோதையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறைக்கு வந்த புகாரையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.