மதுபானக் கடைக்கு எதிராக போராடிய இளைஞரை கைது செய்த காவல்துறை: கண்டித்த நீதிபதி!

 

மதுபானக் கடைக்கு எதிராக  போராடிய இளைஞரை கைது செய்த காவல்துறை: கண்டித்த நீதிபதி!

திருவாரூர் அருகே தேவர்கண்டநல்லூர் எனும் இடத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து வருகின்றனர்.

திருவாரூர் : மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விளம்பர பதாகை வைத்த இளைஞரை கொரடாச்சேரி காவல்துறையினர் கைது செய்ததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

alcohol

திருவாரூர் அருகே தேவர்கண்டநல்லூர் எனும் இடத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அங்குள்ள சில இளைஞர்கள் கண்டித்து, தமிழ்நாடா குடிகார நாடா ? உள்ளிட்ட சில வாசகங்களை வைத்துள்ளனர். இதனால் அங்கு பேனர்களை வாய்த்த செல்லப்பாண்டியன் என்பவரை கொரடாச்சேரி காவல்துறையினர் கைது செய்தனர் . பின்பு செல்லப்பாண்டியன் மீது மூன்று  பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நன்னிலம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

judge

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விளம்பர பதாகை வைத்தது குற்றமா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் இளைஞரை கைது செய்ததற்குக் கண்டனம் தெரிவித்தார். பின்பு செல்லப்பாண்டியனை சொந்த ஜாமீனில் நீதிபதி விடுவித்தது குறிப்பிடத்தக்கது.