மதிய உணவுக்கு வீட்டுக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: கதறும் தந்தை!

 

மதிய  உணவுக்கு வீட்டுக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: கதறும் தந்தை!

மூன்றாம்  வகுப்பு மாணவி மதிய உணவுக்காக  வீட்டுக்கு சென்ற போது விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சை: மூன்றாம்  வகுப்பு மாணவி மதிய உணவுக்காக  வீட்டுக்கு சென்ற போது விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சையின் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்  அப்துல் ரஹ்மான். எல்கட்ரீசியனாக உள்ள இவருக்கு அப்ரா பாத்திமா என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 3-ஆம் வகுப்பு பயின்று வருகிறாள்.  அப்ரா  பாத்திமா மதிய உணவுக்காகப் பள்ளியிலிருந்து வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பக்கமாகக் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆசாமி ஒருவர் பாத்திமாவை வேகமாக மோதியுள்ளார். 

murder

இதையடுத்து அப்பகுதி மக்களால் மீட்கப்பட்ட பாத்திமா, உடனே ஆம்புலன்ஸில் ஏற்றி  அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். அப்ரா சுய நினைவை இழந்துள்ளதாகவும் மருத்துவர்கள் கூறிய நிலையில் சிறுமி தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாள். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

வறுமையில் வாழும்  சிறுமியின் தந்தையோ, ‘நல்லா படிச்சு நான் வேலைக்கு போயி உன்னை காப்பாத்துறேன்ப்பா’ என்று அடிக்கடி சொல்வாள். இப்போது அவள் உயிருக்குப் போராடும் நிலையில் செலவுக்கு கூட பணம் இல்லாமல் நிர்க்கதியாக இருக்கிறேன்’ என்று கதறி அழுகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.