மணிரத்னத்தின் பெருந்தன்மை இதுதான்…வியப்பில் கோலிவுட்!

 

மணிரத்னத்தின் பெருந்தன்மை இதுதான்…வியப்பில் கோலிவுட்!

சிவா ஆனந்த் சொந்தமாகப் படம் தயாரிக்கிறார் என்று தெரிந்தும் அதை அனுமதித்துள்ளது

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் நிர்வாகியாக இருப்பவர் சிவா ஆனந்த்.  தெலுங்கில் படம் ஒன்று இயக்கியிருக்கும் இவர் விக்ரம் பிரபு, ராதிகா, சரத்குமார் நடிப்பில் வெளியான  வானம் கொட்டட்டும் படத்தில் பாடல்கள்  எழுதியிருந்தார். 

ttn

இந்நிலையில் சிவா ஆனந்த் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.  இவர் மணிரத்னம் இயக்கிய இந்திப்படங்களில் அவரிடம் உதவியாளராகப் பணியாற்றி , அலைபாயுதே படத்தின் இந்திப்பதிப்பு உட்பட இந்தியில் பல படங்களை இயக்கிய ஷாத் அலி இப்படத்தை இயக்கவுள்ளார்.

ttn

தமிழ், இந்தி ஆகிய இருமொழிகளிலும் வெளியாக உள்ளது. சிவா ஆனந்த்  தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் நிர்வாக வேலைகளையும் பார்த்து வருகிறார். சிவா ஆனந்த் சொந்தமாகப் படம் தயாரிக்கிறார் என்று தெரிந்தும் அதை அனுமதித்துள்ளது மணிரத்னத்தின் பெருந்தன்மை என கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுத்து வருகின்றனர்.