மணவாளகுறிச்சி பெண் காவலர் சீனாவில் படைத்த சாதனை
Aug 14, 2019, 21:59 IST1565800151000
மணவாளகுறிச்சி காவல்நிலைய பெண் காவலர் கிருஷ்ணரேகா சீனாவில் நடந்த உலக காவல் துறையினர் விளையாட்டு போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
மணவாளகுறிச்சி காவல்நிலைய பெண் காவலர் கிருஷ்ணரேகா சீனாவில் நடந்த உலக காவல் துறையினர் விளையாட்டு போட்டிகளில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
சீனாவில் நடைபெற்ற சர்வேதச அளவிலான காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பங்கேற்கும் சர்வேதச தடகள போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம், மணவாளகுறிச்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் திருமதி.கிருஷ்ண ரேகா என்பவர் தேர்வாகினார்.
இவர் ஏற்கனவே காவல்துறை சார்பாக மாநில மற்றும் மாவட்ட அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகைசூடி பல பதக்கங்களை பெற்றுள்ளார்.