“மட்”டனை குறைத்த மனைவி ! “மூட்” அவுட்டாகி எரிந்த கணவன் !

 

“மட்”டனை குறைத்த மனைவி ! “மூட்” அவுட்டாகி எரிந்த கணவன் !

நவி மும்பை அருகே ஆட்டிறைச்சியை மனைவி குறைவாக வைத்ததால், மூட் அவுட் ஆன கணவன் தீக்குளித்த வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது.

நவி மும்பை அருகே ஆட்டிறைச்சியை மனைவி குறைவாக வைத்ததால், மூட் அவுட் ஆன கணவன் தீக்குளித்த வினோத சம்பவம் நடைபெற்றுள்ளது.

ttn

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே ஜூய்கமோதி கிராமத்தில் 37 வயது பெண்மணி பல்லவி வசித்து வருகிறார். இவரது கணவர் பெயர் மாருதி சரோட் கூலித் தொழிலாளி ஆவார். இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.கடந்த டிசம்பர் 4ம் தேதி குடிபோதையில் இருந்த கணவனுக்கு, மனைவி பல்லவி ஆட்டிறைச்சி குறைவாக வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் தன்னுடைய உடலில் மண்ணெண்ணெய் எடுத்து ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

ttn

இதை பார்த்த குழந்தைகள் அக்கம் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்தனர். இதையடுத்து அவர் நெருள் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறைவான மட்டன் கறி வைத்ததால் குடிபோதையில் இருந்த கணவர் தீ வைத்துக்கொண்டதாக அவரது மனைவி பல்லவி டிசம்பர் 9ம் தேதி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.