மடிசாரை கட்டிகோங்கோ திருமா…அடங்காத காயத்ரி ரகுராம்

 

மடிசாரை கட்டிகோங்கோ திருமா…அடங்காத காயத்ரி ரகுராம்

சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

நடிகை காயத்ரி ரகுராம் திருமாவளவனுக்கு எதிராக தொடர்ந்து கருத்து கூறி வருகிறார். அதாவது இந்துக்களுக்கு எதிராக பேசி வரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும், இந்துக்கள் செருப்பால் அடியுங்கள் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார்.

vck

மதவெறியைத் தூண்டும் வகையில் காயத்ரி ரகுராம் பேசியிருப்பதாகப் பலரும் கருத்து கூறி வந்தனர்.

vck

இதையடுத்து இன்று காலை விசிக மகளிர் அமைப்பினர் 50ற்கும் மேற்பட்டோர், சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் மீண்டும் தனது டிவிட்டர் பக்கத்தில் திருமாவளவனை திட்டி தீர்த்துள்ளார். அவரது பதிவில்,  ‘திருமாவளவனால் என்னை நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை. எல்லா இந்துக்களும் அவருக்கு சேலை அல்ல ஒரு மடிசாரை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் எம்.பினா 5 அடி கூந்தல் இருக்குமோ..? ‘என்றும் தொடர்ந்து வசைபாடி வருகிறார். 

மேலும் தனது செல்போனுக்கு  தொடர்ந்து போன்கால்கள் வருவதாக குறிப்பிட்டு அதை டிவிட்டரில் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.  மேலும் தனக்கு பாதுகாப்பு அளித்த போலீசாருக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.