மடமடவென கைதி பட ஷுட்டிங்கை முடித்த கார்த்தி!

 

மடமடவென கைதி பட ஷுட்டிங்கை முடித்த கார்த்தி!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதிப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதிப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான தேவ் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதல் கலந்த சாகச திரைப்படமாக அமைந்திருந்த இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றதுடன், ஓரளவு வசூலையும் குவித்தது.

அதைத்தொடர்ந்து தற்போது ‘மாநகரம்’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். நாயகியே இல்லாத இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

kaithi

ஜெயிலில் கைதியாக இருக்கும் கார்த்தி, சக கைதிகளுடன் திட்டம் தீட்டி அங்கிருந்து தப்பிப்பதே படத்தின் கதை. அத்துடன் நான்கு மணி நேரத்தில் நடக்கும் கதை எனவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் மற்ற அப்டேட் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.