மசூதிகளில் தமிழில் நமாஸ் செய்ய சொல்வீர்களா ஸ்டாலின்? – ஹெச். ராஜா!

 

மசூதிகளில் தமிழில் நமாஸ் செய்ய சொல்வீர்களா ஸ்டாலின்? – ஹெச். ராஜா!

தமிழகத்தின் பல இடங்களில் நடைபெறும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களை முஸ்லிம்கள் மட்டும் நடத்துகின்றனர் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். 

கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, “என்ஆர்சி யை கொண்டு வந்தது காங்கிரஸ்.  இப்போது எதிர்க்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரு கோமாளி கூட்டம் என மக்கள் நினைக்கும் அளவுக்கு செயல்பட்டு வருகிறது. சிஏஏ வால் யாருக்கும் குடியுரிமை பாதிப்பு இல்லை.  சிஏஏ போராட்டம் மத ரீதியிலான போராட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை வெறியேற்ற என்ஆர்சி தேவையில்லை.  பெருந்துறை,  கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பங்களதேஷை சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். 106 நாள் ஜெயலில் இருந்ததால் ப. சிதம்பரம் மூளை உருகிவிட்டது.

h raja

ஸ்டலின் திமுகவை முஸ்லீம் லீக்காக மாற்றிவிட்டார். சிஏஏ போராட்டம் எதிர்க்கட்சிகள் போராட்டம் அல்ல.  1947 க்கு முந்திய நிலவரத்தை உருவாக்க போராடுகிறார்கள். சட்டவிரோதமாக போராட்டம் நடத்தி வருபவர்களை கைது செய்ய வேண்டும்

இந்து கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த சொல்லும் திமுகவினர் மற்றும் திகவினர் மசூதிகளில் நமாஸ் செய்வதை தமிழில் செய்ய சொல்வார்களா? தமிழகத்தின் பல இடங்களில் நடைபெறும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களை முஸ்லிம்கள் மட்டும் நடத்துகின்றனர்” எனக்கூறினார்.