மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில்: ஆன்லைன் முறையில், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது அம்பலம்!

 

மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில்: ஆன்லைன் முறையில், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது அம்பலம்!

மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகப் பெண்கள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். 

தென்காசி: மசாஜ் நிலையம் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகப் பெண்கள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். 

மசாஜ் நிலையம் என்ற பெயரில் பல்வேறு இடங்களில் பாலியல் தொழில்களில் ஈடுபடும் அவலம் ஆங்காங்கே நடந்து வருகின்றன. அந்த வகையில் குற்றாலம் ஐந்தருவி பகுதியிலுள்ள விடுதி ஒன்றில், மசாஜ் நிலையம் என்ற பெயரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரியும் சீசன் காலத்தில் விபச்சாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு புகார் வந்தது.

massage

 

இதனையடுத்து அங்கு அதிரடி சோதனை நடத்திய போலீசார், கேரள மாநிலத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட எட்டு பேரை கைது செய்தனர். 

 

massage

விசாரணையில் இவர்கள் குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து ஆன்லைன் முறையில், பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது. பின்னணியில் முக்கிய பிரமுகர்களும் இருப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்த அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.