மசாஜ் சென்டரில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வடமாநில பெண் மரணம்.. இயற்கை மரணமா? கொலையா? போலீசார் விசாரணை!
நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த சுங் சூய் மொய் என்ற பெண் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செட்டி பேடு கிராமத்தில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த சுங் சூய் மொய் என்ற பெண் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செட்டி பேடு கிராமத்தில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அங்கு வேலை செய்வதால் அப்பகுதியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து சக தோழிகளுடன் தங்கி வந்தார். நேற்று வழக்கம் போல பணிக்குச் சென்று விட்டு அனைவரும் வீடு திரும்பி எல்லாரும் உறங்கியுள்ளனர். இன்று காலை பணிக்கு நேரம் ஆகியும் சுங் சூய் எழுந்திருக்கவில்லையாம். அதனால் அவரது நண்பர்கள் அவரை எழுப்பியுள்ளனர்.
ஆனால் அவர் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த தோழிகள் அக்கம் பக்கத்தினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், சுங் சூய்யின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சுங் சூய் வை பற்றி அவரது தோழிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சுங் சூய்க்கு சுவாச கோளாறு இருந்ததாகவும் அதன் காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது. அந்த பெண் உடல் நலக் குறைவால் இறந்தாரா அல்லது கொலை செய்யப் பட்டுள்ளாரா என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.