மசாஜ் சென்டரில் உல்லாசம் | வேலை வாங்கி தருவதாக மோசடி!

 

மசாஜ் சென்டரில் உல்லாசம் | வேலை வாங்கி தருவதாக மோசடி!

வேலை வாங்கி தருவதாக கூறி கேரளாவில் இருந்தும், சென்னையில் இருந்தும் பெண்களை மதுரைக்கு வரவழைத்து மசாஜ் சென்டரில் வேலை தருவதாக விபச்சாரத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபட வைத்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். 

வேலை வாங்கி தருவதாக கூறி கேரளாவில் இருந்தும், சென்னையில் இருந்தும் பெண்களை மதுரைக்கு வரவழைத்து மசாஜ் சென்டரில் வேலை தருவதாக விபச்சாரத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபட வைத்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். 

massage centre

மதுரையில் கடந்த சில மாதங்களாகவே மசாஜ் சென்டர், ஆயுர்வேத சிகிச்சை மையம், ஹெல்த்கேர் என்கிற பெயரில் விபச்சாரம் நடப்பதாக அடுத்தடுத்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து அவ்வாறு செயல்படும் மையங்களை தீவிரமாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையில் காளவாசல் பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வருவதாக எஸ் எஸ் காலனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளா மற்றும் சென்னையைச் சேர்ந்த பெண்கள் சிலரை அழைத்து வந்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது. இது குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது வெளி மாநிலங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். 

massage centre

இதனை தொடர்ந்து அந்த பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய திண்டுக்கல்லைச் சேர்ந்த கார்த்திக் முருகன் (27), கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீரவன், சென்னையை சேர்ந்த காயத்திரி, நாகேஸ்வரி, ஜோபிதா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். 
அவர்களிடம் இருந்த பணம் வசூல் செய்யும் ஸ்வைபிங் மிஷின் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதே போல் அதே பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் விபசாரம் செய்ததாக அதன் உரிமையாளர்கள் பிரின்ஸ் இம்மானுவேல், கனிமொழி, திவ்யா, சத்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் மசாஜ் சென்டரில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தது  குறிப்பிடத்தக்கது.