மக்கள் வரிப்பணத்துல சுற்றுப்பயணமா? அதிலும் முதலமைச்சர் சிக்கனமாதான் இருப்பார்… உளறிய செல்லூர் ராஜூ

 

மக்கள் வரிப்பணத்துல சுற்றுப்பயணமா? அதிலும் முதலமைச்சர் சிக்கனமாதான் இருப்பார்… உளறிய செல்லூர் ராஜூ

மக்களுடைய வரிப் பணத்தை செலவழித்து முதலமைச்சர் சுற்றுப்பயணம் செல்லவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, “மதுரை கோவில் மாநகரம் என்பதால் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு கோபுரம் போன்ற வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக மத சார்பற்ற அணி நாங்கள் மதசார்பற்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வலியுறுத்துகிறேன், இதை வைத்து அரசியல் செய்ய விரும்புபவர்கள் மதுரை வளர்ச்சியை தடை செய்ய நினைப்பது தவறு. 

செல்லூர் ராஜூ

மதுரை மாநகர் வளர்ச்சியில் அதிமுக அரசு கவனமாக மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.மதுரை வரலாற்றில் எந்த ஒரு அரசும் செய்யாத புதிய புதிய திட்டங்களை இந்த அரசு செய்து வருகிறது. ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்யபட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது. 

மக்களுடைய வரிப் பணத்தை செலவழித்து முதலமைச்சர் சுற்றுப்பயணம் திடீரென செல்லவில்லை . ஏற்கனவே திட்டமிடப்பட்டு எங்கெங்கு எந்தெந்த நாடுகளுடன்  ஒப்பந்தம் போட வேண்டும் என முன்கூட்டியே திட்டமிடப்பட்டது.

சுற்றுப் பயணத்தில் கூட நமது முதலமைச்சர்  சிக்கனமாக செயல்படுகிறார்” என தெரிவித்தார்.