மக்கள் நீதி மய்ய 3ம் ஆண்டு விழா… கொடி ஏற்றி கொண்டாட உத்தரவு

 

மக்கள் நீதி மய்ய 3ம் ஆண்டு விழா… கொடி ஏற்றி கொண்டாட உத்தரவு

இது குறித்து மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகிற பிப்ரவரி 21ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் மூன்றாம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் மூன்றாம் ஆண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கட்சிக் கொடியை ஏற்றிக் கொண்டாடா தொண்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகிற பிப்ரவரி 21ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் மூன்றாம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணிக்குள்ளாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் மற்றும் தொண்டர்களின் இல்லங்களிலும் கட்சிக் கொடியினை ஏற்றிக் கொண்டாட வேண்டும் என்று கட்சி முடிவு செய்துள்ளது.

kamal

கொடியேற்றிய பிறகு அது குறித்த தகவல் மற்றும் விவரங்களை அந்த அந்த மாவட்டச் செயலாளர்கள் மூலமாக கட்சி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். அனைத்து தகவலும் வந்து சேர்ந்த பிறகு நம்மவர் (கமல்) தமிழகம் முழுவதும் எத்தனை கொடிகள் ஏற்றப்பட்டது என்கிற விவரத்தை வெளியிட உள்ளார். எனவே, ஏற்றப்படும் ஒவ்வொரு கொடி குறித்த தகவலும் கண்டிப்பாக அனுப்பி வைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.