மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மாவட்ட நிர்வாகிகள் நீக்கம்: கமல்ஹாசன் அதிரடி!

 

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மாவட்ட நிர்வாகிகள் நீக்கம்: கமல்ஹாசன் அதிரடி!

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மாவட்ட பொறுப்பாளர்கள் 3 பேரை நீக்கம் செய்து கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மாவட்ட பொறுப்பாளர்கள் 3 பேரை நீக்கம் செய்து கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவக்கி அரசியலில் பரபரப்பாக இயங்கி வருகிறார். மக்களுடனான சந்திப்பு என்ற பெயரில் மக்களை நேரில் சந்தித்து குறைகளை அவ்வப்போது கேட்டறிந்து வருகிறார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளராக இருந்த இமாம் ஹாசன் கட்சியின் கட்டுப்பாட்டிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக மக்கள் நீதி மய்யத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.

mnm

அவர் மட்டுமின்றி, அவர் சம்பந்தப்பட்ட அதே குற்றச்சாட்டின் அடிப்படையில் மேலும் இரண்டு பேரையும் நீக்குவதாகவும் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.