மக்கள் நீதி மய்யத்திடம் உதவி கேட்ட திமுக தொண்டர்: ஓடி வந்து உதவியவருக்கு நன்றி கூறிய உதயநிதி
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பலரும் உதவி செய்து வருகிறார்கள். குறிப்பாக திமுக ஆரம்பத்தில் இருந்தே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறது.
கொரோனா காரணமாக ஒட்டுமொத்த உலகமும் தனது இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளது. ஊரடங்கால் சாமானிய மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். திரைத்துறையினரும் வீட்டில் முடங்கி போயுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பலரும் உதவி செய்து வருகிறார்கள். குறிப்பாக திமுக ஆரம்பத்தில் இருந்தே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறது.
இந்நிலையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஒருவர் மக்கள் நீதி மய்யத்திற்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார். உடனே மக்கள் நீதி மய்யம் கட்சியின் வட சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கிஷோர் சுப்பிரமணியன் அந்த நபரை தேடி சென்றுள்ளார்.
??நன்றி https://t.co/K9y8Ejh79o
— Udhay (@Udhaystalin) May 7, 2020
அப்போது உதவி கேட்ட நபர் தனது வண்டியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவம் பொறித்த படத்தினை ஒட்டியிருந்துள்ளார். அதை கண்ட பிறகும் கிஷோர் சுப்பிரமணியன் நிவாரணப் பொருட்களை அவரிடம் கொடுத்துவிட்டு வந்துள்ளார். இதை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இதை கண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் நீதி மய்ய நிர்வாகிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.