மக்களோடு மக்களாக வங்கிக்குள் புகுந்த நல்ல பாம்பு…ஓட்டம் பிடித்த வாடிக்கையாளர்கள்!

 

மக்களோடு மக்களாக வங்கிக்குள் புகுந்த நல்ல பாம்பு…ஓட்டம் பிடித்த வாடிக்கையாளர்கள்!

இதனைக் கண்ட வாடிக்கையாளர்கள் ஒரு புறம் அலறியடித்துக் கொண்டு ஓட, வாங்கி பணியாளர்களோ அதிர்ச்சியில் உறைந்து போயினர். பி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் வழக்கம் போல வங்கிக்குள் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் என பரபரப்பாக இருக்க, அதே பரபரப்புடன் மூன்று அடி  நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று வங்கிக்குள் நுழைந்தது. அது வாசலில் வைத்திருந்த குடிநீர் தொட்டியிலிருந்து வந்துள்ளது.

snake

இதனைக் கண்ட வாடிக்கையாளர்கள் ஒருபுறம் அலறியடித்துக் கொண்டு ஓட, வாங்கி பணியாளர்களோ அதிர்ச்சியில் உறைந்து போயினர். பின்னர் தீயணைப்புத்துறை வீரர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விரைந்து வந்து சுமார் அரைமணிநேர போராட்டத்திற்குப் பிறகு பாம்பை பிடித்தனர். இதை தொடர்ந்து பிடிக்கப்பட்ட பாம்பு வனப்பகுதியில்  விடப்பட்டது.

snake

பின்னர் மீண்டும் வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் இயல்புநிலைக்குத் திரும்பினார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது.